காணிகளை விடுவிக்க கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

375 0

946143_1645986058985946_7990135763936775916_n-1கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட கிளிநகர் பகுதியில் தமது காணிகளை விடுவிக்க கோரி பொது மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
இராணுவத்தின் வசம் உள்ள தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் சுமூகமான தீர்வொன்று கிடைக்கும் வரையில் தாம் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளப்புபோவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மீள்குடியேற்றப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தி அடைந்த நிலையில் தொடர்ந்தும் தாம் அகதிகளாகவே வாழ்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் ஏனையவர்ளை போன்று தாமும் சுமூகமான வாழ்வை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.