புத்தாண்டினை வரவேற்று ஆலய முன்றலில் பலூன ஊதி உடைத்து ஓடி விளையாடிக்கொண்டிருந்த பதினொரு வயதுச் சிறுவன் ஒருவன் படியில் தவிறிவழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் ஏறாவூர் – சவுக்கடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தளவாய் விக்னேஷ்வரா வித்தியாலயத்தின் தரம் 6ஐச் சேர்ந்த ஜெயகரன் மதுஷன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் காவல்துறையினர் தெரிவித்தனர்.
வீட்டின் அருகிலுள்ள தேவாலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு ஆராதனைக்காக கட்டப்பட்டிருந்த பலூன்களை தனது தோழர்களுடன் உடைத்து விளையாடிய பின்னர் வீட்டிற்குச் செல்ல முற்பட்டபோது படியில் இடறிவிழுந்த சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சற்று நேரத்தில் உயிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.