கொத்தலாவல சட்ட மூலத்திற்கு எதிரான ஒன்றிணைந்த மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இன்று காலை திருகோணமலை நகரில் இடம்பெற்றது.
இலவசக் கல்வியை நாசமாக்கும் இராணுவ மயமாக்கலுக்கு வழிவகுக்கும் கொத்தலாவல சட்ட மூலத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டப்பேரணி இன்று கந்லை திருகோணமலை மடத்தடி சந்தியில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டப்பேரணியானது வட கரை வீதியூடாக திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தை வந்தடைந்தது.
நாட்டின் தலைவர்களது முக கூடிகளையும் அவர்களது ஆடைகளைக் குறிக்கும் வகையில் வேடமிட்ட சிலர் பிரேதப் பெட்டி ஒன்றினை ஏந்தியவாறு குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
அரசானது குறித்த சட்டமூலத்தினை திருத்தி அமைத்து அனைவரது இலவசக்கல்விக்கும் தொடர்ச்சியான தீர்வினை பெற்றுத்தரவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அவர்கள் அவ்விடத்தினை விட்டு கலைந்து சென்றனர்.