அதிபர், ஆசிரியர் போராட்டத்தில் குதித்தனர்!

152 0

கல்வி சமூகத்தினர் எதிர்நோக்கும் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களை சேர்ந்த அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று ஆகஸ்ட் முதலாம் திகதி காலை போராட்டத்தில் குதித்தனர்.

நுவரெலியா காமினி தேசிய கல்லூரிக்கு முன்னாள் களம் இறங்கிய போராட்டகாரர்கள் அங்கிருந்து வாகன பேரணியாக நுவரெலியா – பதுளை பிரதான வீதி ஊடாக நுவரெலியா நகரை நோக்கி வருகை தந்தனர்

இதன்போது கல்வி சமூகத்தினர் எதிர் நோக்கும் கோரிக்கைகள் தொடர்பாக எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கோஷமும் எழுப்பப்பட்டு பேரணியை இவர்கள் நடத்தினர்