களத்தில் இறங்க தயாராகும் கூட்டு எதிர்க்கட்சி!- டளஸ் அழகப்பெரும

274 0

6601கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய மாவட்டம் மற்றும் தொகுதி மட்டங்களிலான குழுக்களை நியமிக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இறுதிக்குள் மாவட்ட குழுக்கள் நியமிக்கப்பட உள்ளதுடன் தொகுதி வாரியான குழுக்களையும் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகள் அடங்கியதாக இந்த குழுக்கள் நியமிக்கப்படும்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உட்பட கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த குழுக்களில் உள்ளடக்கப்பட உள்ளனர்.இதற்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் டளஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.