நாட்டில் உள்ள சகல பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

181 0

இன்று (31) காலை முதல் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் உள்ள வடமராட்சி வடக்கு கிராம அலுவலர் பிரிவு இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையில் அனைத்து பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி   மேலும் தெரிவித்துள்ளார்.