தமிழக மீனவர்கள் 11 பேர் காவல் மீண்டும் நீட்டிப்பு

349 0

2புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை கடந்த மாதம் 2ஆம் திகதியும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை ஜூன் 5ஆம் திகதியும், கோட்டைப் பட்டினம் மீனவர்கள் 3 பேரை ஜூன் 16ஆம் திகதியும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்து சிறையில் அடைத்தனர்.
இந்த மீனவர்கள் காவல் வெள்ளிக்கிழமை முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து அவர்கள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று முன்னிலை படுத்தப்பட்டனர்.
மூன்றாவது முறையாக எதிர்வரும் 21ஆம் திகதி வரை இவர்களது காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.