கொழும்பு துறைமுகநகரில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்யலாமா?

151 0

கொழும்பு துறைமுக நகரில் அமெரிக்க முதலீட்டாளர்கள் முதலீடு செய்யவுள்ளமை தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

துறைமுக நகரத்தை உள்ளடக்கிய சட்டம் தொடர்பில் அமெரிக்கா இன்னும் கவலை கொண்டுள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா பி. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எனினும் அமெரிக்க நிறுவனங்களை முதலீடு செய்யவேண்டாம் என கோரும் நடவடிக்கைளில் அமெரிக்கா ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கொழும்பு துறைமுக நகரத்தை உள்ளடக்கிய சட்டம் மற்றும் அதிலுள்ள போதாமைகள் குறித்து சில கவலைகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு சீன நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது என்றும் டெப்லிட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

“குறித்த அந்நிறுவனத்துடன் வணிகம் செய்வது நல்லதல்ல,” எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகரத்தில் வணிகம் செய்வதற்கான விதிமுறைகளை நிறுவனங்கள் கவனிக்க வேண்டும்.

கொழும்பு துறைமுநகர சட்டத்தின் சில அம்சங்கள் குறித்து நான் தொடர்ந்தும் கவலையடைந்துள்ளேன்,ஊழல் செல்வாக்குகள்,சட்டவிரோத பணப்பரிமாற்றம் போன்றவற்றில் ஈடுபடத்தூண்டும் பலவீனமான அம்சங்கள் அதில் உள்ளன,அமெரிக்க நிறுவனங்கள் இது குறித்து கரிசனை கொள்ளப்போகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்

அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்வதை அமெரிக்கா தடுக்கவில்லை என்று டெப்லிட்ஸ் வலியுறுத்தியதுடன், ஆனால் அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் எந்தவொரு நிறுவனத்துக்கு
மான முதலீட்டுசூழல் குறித்து தொடர்ந்தும் கரிசனை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.