குற்றவாளியாக இனங்காணப்பட்ட அவர், 2007ஆம் ஆண்டு மே 29ஆம் திகதி நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் தனக்கான தண்டனையை வெலிக்கடை சிறைச்சாலையில் அனுபவித்துள்ளார். தண்டனைக்காலம் நிறைவுற்றதன் பின்னர் விடுதலையாகியுள்ளார் என அரசாங்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் ஏற்கெனவே வேலைச்செய்த சிறுமியை ரிஷாட்டின் மற்றுமொரு மைத்துனரான மொஹமட் ஹனீஸ் என்றழைக்கப்படுபவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என அறியமுடிகின்றது.