ஆபத்தான குவாரிகளின் உரிமங்கள் ரத்து

363 0

semman1_2140124a_2926257fமதுரை அருகே குவாரியில் மண் சரிந்து 3 பேர் பலியானதை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி ஆபத்தான குவாரிகளின் உரிமத்தை உடனே ரத்து செய்யுமாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டியில் கல் குவாரியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 3 பேர் இறந்தனர்.
இதையடுத்து சீல் வைக்கப்பட்ட அந்த குவாரியை மதுரை கோட்டாட்சியர் செந்தில் குமாரி, தொழிலாளர் நல அலுவலர் சாந்தி உட்பட பலர் நேற்று ஆய்வு நடத்தினர்.
சம்பவம் குறித்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கல்குவாரியின் உரிமையாளர் சக்கிமங்கலத்தைச் சேர்ந்த சேகர், மேலாளர் பூவேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.