ஈஸ்டர் தாக்குதல்; விரைவில் குற்றப்பத்திரிகை

190 0
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று  நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பிரதான சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படுவதற்கான பணி இறுதி கட்டத்தில் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

சட்டமா அதிபர், சமீபத்தில் ஜனாதிபதியை சந்தித்ததாகவும், இது குறித்து ஜனாதிபதி விசாரித்தபோது, ​​விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் சட்டமா அதிபர் விளக்கினார் என்றும் நீதி அமைச்சர் தெரிவித்தார்.

விசாரணையை சீராக்க சட்டமா அதிபர் திணைக்களம் சில சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதுடன், அவர்களில் சிலர் விளக்கமறியலிலும் ஏனையவர்கள் தடுப்புக் காவலிலும்  வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.