கறுப்பு யூலை 38 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு-யேர்மனி,பீலபெல்ட், பிறீமன்.

522 0

சிறிலங்கா சிங்கள இனவெறி அரசின் தமிழர்கள் மீதான இன அழிப்பின் ஓர் அங்கமான கறுப்பு யூலை 38 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு இன்று (22.07.2021)பீலபெல்ட் நகர மத்தியில் மிகவும் உணர்வோடு நினைவு கூரப்பட்டது.

பீலபெல்ட் தமிழாலய நிர்வாகி திருமலைச்செல்வன் அவர்கள் நினைவுச்சுடரினை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். கவனயீர்ப்பு நிகழ்வில் இன அழிப்பு காட்சிகளை பார்வையிட்டவர்களுக்கு எமது மனிதநேய செயற்பாட்டாளர்களும் இளையவர்களும் துண்டுப்பிரசுரங்களை வழங்கியதோடு கறுப்பு யூலை படுகொலை பற்றியும் விளக்கமளித்தார்கள்.

இதேபோன்று கறுப்பு யூலை கவனயீர்ப்பு நிகழ்வானது நாளையும் நாளை மறுநாளும் யேர்மனியில் பல முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.