தடுப்பூசி செலுத்தாதவர்களே கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்- சுகாதார அமைச்சு

174 0

இலங்கையை பொறுத்தமட்டில் அண்மைய தரவுகளின்படி தடுப்பூசி செலுத்தாதவர்களே கொவிட் தொற்றினால்
உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

முதலாவது கொவிட்-19 அலையால் நாட்டில் 13 கொவிட்-19 மரணங்கள் மாத்திரமே பதிவாகியிருந்தன.

இரண்டாவது அலையில் 591 கொவிட்-19 மரணங்களே சம்பவித்திருந்தன.

எனினும், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமான கொவிட்-19 மூன்றாவது அலையில் மாத்திரம் 3,450 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்று நோயியல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே இதனூடாக கொவிட் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளது.