மஸ்கெலியாவில் கவன ஈர்ப்பு போராட்டம்!

184 0

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வலியுறுத்தி இன்று(25) மஸ்கெலியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மஸ்கெலியா எரிப்பொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக தொழிலாளர் தேசிய சங்கமும் மலையக மக்கள் முன்னணியும் இணைந்து இந்த கவனயீர்ப்பு பேராட்டத்தை முன்னெடுத்தன.

தொழிலாளர்களுக்கு எதிரான பெருந்தோட்ட நிறுவனங்களின் அடக்குமுறைகள், நிபந்தனைகளற்ற அடிப்படை சம்பளம் வழங்கப்படாமை, தொழிற்சுமை அதிகரிக்கப்படல், வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே தொழில் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்குமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, அத்துமீறிய பெருந்தோட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்.