டுபாயிலிருந்து இயங்கும் கப்பம் கோரல் குழுவின் உறுப்பினர்கள் நால்வர் கைது!

144 0

டுபாயிலிருந்து இயங்கும் கப்பம் கோரல் குழுவொன்றின் உறுப்பினர்கள் 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கப்பம் கோரும் குழுவின் பிரதானி டுபாய் நாட்டுக்கு தப்பிச் சென்ற ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் 6 மனித கொலை குற்றச்சாட்டுக்கள் மற்றும் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக அவர் டுபாய் நாட்டுக்கு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.

மேலும் அவர் களுத்துறை – எதனமடல பகுதியில், சிறைச்சாலை பேருந்துக்குள் கொலை செய்யப்பட்ட ரணாலே சமயங் என்பவரின் உதவியாளர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனியார் நிறுவனம் ஒன்றில் கப்பம் பெற தயாராகவிருந்தமை தொடர்பில் கிடைக்கபெற்ற முறைப்பாட்டுக்கமைய குறித்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்