ரஷ்ய தூதரக அதிகாரிகளுக்கு அமெரிக்கா 72 மணிநேரம் கெடு

350 0

03-1446564681-1ரஷ்யாவைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் 35 பேரை குறித்த பதவிகளிலிருந்து அமெரிக்கா நீக்கியுள்ளது.

இவர்கள் 72 மணி நேரத்துக்குள் அமெரிக்காவிலிருந்து வெளியேறவேண்டுமென ஜனாதிபதி பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கு ஆதரவாக ரஷ்யா செயற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இது குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் உள்ள அந்நாட்டு அதிகாரிகள் 35 பேரை அமெரிக்கா நீக்கியுள்ளது.

அத்துடன், இவர்கள் தமது குடும்பத்துடன் அமெரிக்காவை விட்டு வெளியேற 72 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.