டிப்பர் ரயிலில் மோதி விபத்து; 4 முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிளுக்கு பலத்த சேதம்

256 0

கணேமுல்ல புகையிரதக் கடவையில் இன்று மதியம் பயணித்த ரயில் டிப்பர் ஒன்றை மோதிய விபத்தில் 4 முச்சக்கர வண்டிகளும் ஒரு மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்ததாக கனேமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

ரயில் பயணிக்கையில் மூடப்பட்டிருந்த புகையிரதக் கடவையில் கடவத்தை யிலிருந்து வந்த குறித்த டிப்பர் மூடப்பட்டிருந்த கேற் வழியாக செலுத்த முயன்ற போது ரயிலில் மோதியுள்ளது.

ரயிலால் இழுத்துச் செல்லப்பட்ட டிப்பர் 4 முச்சக்கர வண்டிகளையும் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளின் மீதும் மோதியது.

எனினும் டிப்பரின் சாரதி புகையிரதக் கடவையில் டிப்பரை நிறுத்த முயன்றதாகவும் பிரேக் தொழிற்படாததால் விபத்து நடந்ததாகவும் கூறினார்.

கனேமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.