பொதுஜன பெரமுன எம்.பி இராஜினாமா செய்தார்

203 0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் எம்.பிக்களில் ஒருவர், தன்னுடைய இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

தேசியப் பட்டியல் எம்.பியான ஜயந்த கெட்டகொடவே தன்னுடைய இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

இந்நிலையில், பசில் ராஜபக்ஷ, தேசியப் பட்டியலின் ஊடாக, பாராளுமன்றத்துக்கு வருகைதருவதற்கு வழிசமைக்கும் வகையிலேயே இவர், இராஜினாமா செய்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.