4 நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வுகள்

203 0

பாராளுமன்ற அமர்வுகள் நாளை (06) முதல் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (05) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஜூலை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.