முன்னாள் முதல்வர் பழனிசாமி ரூ.648 கோடி மதிப்பில் தென் பெண்ணை – பாலாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
வட தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் பாலாற்றின் நீர்வரத்தை கர்நாடகா மற்றும் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டி முற்றிலும் தடுத்து விட்டது.
கடந்த 2000-ம் ஆண்டு மத்திய நீர்வளத்துறை பல்வேறு ஆய்வுகளை நடத்தி, 2006-ம் ஆண்டு தென்பெண்ணையில் இருந்து வெளியேறும் 3.5 டி.எம்.சி உபரி நீரை கால்வாய் வழியாக பாலாற்றுடன் இணைக்க நிறைய சாத்தியக்கூறுகள் இருப்பதாக கண்டறிந்து 2008-ம் ஆண்டு அதற்கான திட்ட அறிக்கையை வெளியிட்டது.
இதன் மூலம் 59.5 கி.மீ., நீள கால்வாயை நெடுங்கல் அணையில் இருந்து நாட்றாம்பள்ளி கல்லாறு வரை இணைக்க ரூ.258.50 கோடி செலவாகும் என திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் பழனிசாமி ரூ.648 கோடி மதிப்பில் தென் பெண்ணை – பாலாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இருப்பினும், பணிகள் தொடங்கவில்லை.
தி.மு.க. ஆட்சியில் பாலாறு, தென்பெண்ணை இணைக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக அரசு புதிய அணை கட்டியுள்ளதால் இந்த திட்டம் நிறைவேறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.