பாராளுமன்றத்தில் ரத்னசிறிக்கு இறுதி அஞ்சலி

256 0

மறைந்த முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடன் இன்று பாராளுமன்றத்துக்கு எடுத்துவரப்பட்டது.

இதன்போது, சபாநாயகர் கரு ஜெயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்னாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மேலும், ரத்னசிறி விக்ரமநாயக்கவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 31ம் திகதி ஹொரணவில் இடம்பெறவுள்ளதாக, அவரது புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது