கிளிநொச்சி தீவிபத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு இழப்பீடு வழங்கிவைப்பு!

283 0

compensation-for-kili-2கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி சந்தைக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு இன்று இழப்பீடு வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கென குறித்தொதுக்கப்பட்ட 74 மில்லியன் ரூபாயில் 72 மில்லியன் ரூபா இன்று 90 வர்த்தகர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ஏனைய 43 வர்த்தகர்களுக்கு எஞ்சிய தொகை வழங்கிவைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறீதரன் மற்றும் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

compensation-for-kili-5compensation-for-kili-3