எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழில் சைக்கிள் பேரணி

271 0

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணம் சைக்கிள் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து இன்று (29) செவ்வாய்க்கிழமை சண்டிலிப்பாய் பிரதேச செயலக முன்றலில் இருந்து மானிப்பாய் பிரதேச சபை வரையிலும் குறித்த சைக்கிள் பேரணி இடம்பெற்றது.

குறித்த பேரணியில், பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் , தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா , வலி.தென்மேற்கு பிரதேச சபை தலைவர் அ. ஜெபநேசன் , வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.