மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 9 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

177 0

மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 கிராம சேவகர் பிரிவும் கோறளைப்பற்று மத்தியில் ஒரு பிரிவு உட்பட 9 கிராமசேவகர் பிரிவுகள் இன்று செவ்வாய்க்கிழமையில் (22) இருந்து தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மாவட்டத்தில் தொடாந்து எழுமாறாக எடுக்கப்பட்டுவரும் அன்ரிஜன் மற்றும் பீசிஆர் பரிசோதனையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலைமையில் கொரோனா நோயாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்ட காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள 164, 164ஏ , 164பி, 164 சி. 162 ஏ. 162பி, 167 சி, 167 பி, ஆகிய 8 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன.

கோறளைப்பற்று மத்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள 206 சி. கிராமசேவகர் பிரிவும் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 12 கிராசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்