கடலில் கரையொதுங்கிய பொருட்களை சேகரித்தவர்களுக்கு ஒவ்வாமை

209 0

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்து கரையொதுங்கிய பொருட்களை தொட்ட சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எக்ஸ்-பிரெஸ் பேர்ல் கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்து கரையொதுங்கிய இரசாயன மற்றும் ஏனைய பொருட்கள் வத்தளை – ப்ரீதிபுர முதல் நீர்கொழும்பு வரையான கடற்கரையில் கரையொதுங்கின.

இதனையடுத்து, அந்தப் பொருட்களை தொட வேண்டாம் என கடல்சார் சமுத்திர பாதுகாப்பு அதிகாரபை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

எனினும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி குறித்த பொருட்களை பலர் சேகரித்துச் சென்றனர். அவர்களில் 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.