அனைத்து கிறிஸ்தவ சகோதரர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தீய சக்திகளை அகற்ற ஏசு கிறிஸ்து இந்த உலகில் பிறந்தார். இந்த நாளில் துயரத்தில் இருக்கும் மக்களையும் பாதிக்கப்பட்ட நம் சகோதரர்களையும் காப்பாற்றுவது நமது கடமையாகும். உலகில் அமைதியையும் மகிழ்ச்சியையும் நிலைநாட்ட அன்பையும், கருணையையும் ஊக்கப்படுத்துவோம்.
எனது அனைத்து கிறிஸ்தவ சகோதரர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.