தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி கொழும்பிற்கு வருகைத்தர வேண்டும்

256 0

1451119076_3955260_hirunews_sampanthan2-1தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி கொழும்பிற்கு வருகைத்தர வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி கொழும்பில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது புதிய அரசியலமைப்பு மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.

அத்துடன் கொழும்பு மார்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.