2017ஆம் ஆண்டு புதிய புரட்சிகள் ஏற்படும் – அமைச்சர் டிலான்

292 0

ed24fd2f79eb6f8db115273829f0d2f0_l2017ஆம் ஆண்டு புதிய புரட்சிகள் ஏற்படும் என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அடுத்த ஜனவரி மாதத்துடன் தேசிய அரசாங்கத்திற்கு இரண்டு வருடங்கள் பூர்த்தியாக உள்ளது.

இந்த இணக்க அரசாங்கத்தின் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பதா இல்லையா என்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானிக்கும்.

2017ஆம் ஆண்டு புதிய புரட்சிகள் ஏற்படும் ஆண்டு. புதிய அரசியலமைப்புத் திருத்தம், தேர்தல் மற்றும் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியவை அடுத்த ஆண்டு நடக்கும் எனவும் அவர் குறிப்பிட்டள்ளார்.