உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய ஞா.சிறிநேசன்

251 0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வடகிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் இன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸாரினால் நீதிமன்றம் ஊடாக தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை வீடுகளில் விளக்கேற்றி முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் நினைவு கூரப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் நேற்று(18) மாலை விளக்கேற்றி படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதேபோன்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி எழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதனும் இன்று விளக்கேற்றி முள்ளிவாய்க்காலில் உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.