வடக்கு மாகாணத்தில் சிவில் செயற்பாடுகளுக்கு இராணுவத்தை பயன்படுத்த முடியாது- விந்தன் கனகரத்தினம்

574 0

vinthan-kanagaratnamவடக்கு மாகாணத்தில் சிவில் செயற்பாடுகளுக்கு இராணுவத்தை பயன்படுத்த முடியாது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் மக்கள் போக்குவரத்திற்கு அபாயமாக இருக்கின்ற வீதிகள் இரண்டின் கரையிலுள்ள பற்றைகளை அகற்றுவதற்கு இராணுவத்தின் உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு வடக்கு மாகாணசபையின் முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டு இரண்டாம் நாள் அமர்வு விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் அனுமதி கோரிய போது ஆளுங்கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

இந்நிலையில் சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து விந்தன் கனகரத்தினத்தின் கருத்துடன் வாதிட்டனர்.