இரத்த வெறியர்கள்.- வன்னியூர் குருஸ் –

318 0

இரத்த வெறியர்கள்.
********
நீதியில்லாத நரக பூமி இது
நீயும் நானும் இதில் கேட்பது எது
நீதியையா…?
நின்மதியையா..?
இரண்டிற்கும் இங்கே இடமேது!

இது பாதகர் செயலென்று
மனிதமே குமுறுகின்றது..!
புரியாத உலகிற்கு
இதைப் புரியவைப்பது
எப்படி…?

பாலகர் பலரின் பிஞ்சுக் கரங்களைத் துண்டாடியவர்களும் இந்தப் பாதகரல்லோ…!

உருவமே தெரியாது பல உடல்களைச்
சிதைத்தவர் அல்வோ இவர்
கனியிளங் கன்றுகளைக் காமப் பசியில்
திண்டாடித் தீர்த்வர்களல்லவோ இவர்கள்…!

இறப்பிலும் நல்ல நிலையில்லாத
நாசப் பிறப்பானவர்கள் இவர்கள்…!
அதனால்தான் எங்கள் இறப்பின் இருப்புகளையும்
இல்லாதொழிக்கும் ஈனர்களாகிறார்கள்…!

வரம்புகள் கிடையாது இவர்கள் புரியும்
வன்செயல்களுக்கு…!
தடுப்புகளும் கிடையாது இவர்கள் அணியின்
அத்துமீறல்களுக்கு…!

இரத்த தாகத்தின் இன வெறி மாறாதார் செயல் இது.

– வன்னியூர் குருஸ் –