அடுத்த வாரத்தில் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்படும் அபாயத்தில் இலங்கை

249 0

கோவிட் வைரஸ் தொற்றின் மிக மேசாமான கட்டத்தை எட்டிய நாடாக இலங்கை “சிவப்பு பட்டியலில்” சேர்க்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அடுத்த வாரத்திற்குள் அப்படியலுக்குள் இணைக்கப்படலாம் எனவும் எச்சரித்துள்ளார்.

இதனால் நாட்டிலிருக்கும் வெளிநலாட்டு வர்த்தகர்கள், புகழ்பெற்ற வர்த்தகர்கள், இரட்டை குடியுரிமை உடையவர்கள் என அனைவரும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஆரம்பித்துள்ளனர்.

அதனை விமான நிலையத்தின் குடிவரவு, குடியகல்வு தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,