போதைப்பொருள் குற்றச்சாட்டு – 20 பேர் தொடர்ந்து விளக்கமறியலில்

263 0

போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 20 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று (03) கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி. ராகல தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவர்களுள் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 16 அதிகாரிகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நபர்களை எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.