வடக்கில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று : மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

228 0

வடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 478 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே 7 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்.

இதேவேளை, வவுனியா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. பூவரசம்குளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை, மல்லாவி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற ஒரு நோயாளிக்கு தொற்று கண்டறியப்பட்டது.