ரஸ்ய தூதுவர் கொலை – இந்தியா கண்டனம்

267 0

india2துருக்கிக்கான ரஸ்ய தூதுவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமைக்கு இந்தியா தமது கடும் கண்டனத்தை வெளிட்டுள்ளது.

சிரியாவின் அலப்போ நகரில் ரஸ்யாவும், துருக்கியும் இணைந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறன.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே தூதர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுதொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த செயல் மிகுந்த துயரத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.