பிரிட்டன் வைரஸ் மேல் மாகாணத்தில் -சந்திம ஜீவந்திர

238 0
மேல்மாகாணத்தில் பிரிட்டனில் காணப்படும் கொரோனாவைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு மருத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்திரதெரிவித்துள்ளார்.
மேல்மாகாணத்தில் எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்தவேளை மேல்மாகாணத்தில் பிரிட்டனில் காணப்படும் கொரோனா வைரஸ் பரவியுள்ளமை தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் பல பாகங்களில் காணப்படும் திரிபடைந்த வைரஸ்கள் இலங்கையில் காணப்படுகின்றனவா என்பதை கண்டறிவதற்கான ஆய்வுகள் நேற்று இடம்பெற்றன என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின் முடிவுகள் இந்த வாரம் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.