சாரா இந்தியாவிற்கு தப்பிச்சென்றிருப்பதற்கான வாய்ப்பில்லை- சரத்வீரசேகர

258 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைமேற்கொண்ட ஒருவரின்மனைவி என கருதப்படும் சாரா( புலத்சினி ராஜேந்திரன்) இந்தியாவிற்கு தப்பிச்சென்றிருப்பதற்கான வாய்ப்பில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

சாய்ந்மருதுவில் குண்டுவெடிப்பு இடம்பெற்று இரண்டு வருடங்களாகியுள்ள போதிலும் சாராவிற்கு என்ன நடந்தது என்ன நடந்ததுஎன்பது மர்மமாகவே உள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் திட்டமிட்டுள்ள இரண்டாவது மரபணுபரிசோதனை மிகவும் கடினமானது என தெரிவித்துள்ள அமைச்சர் சாரா இறந்துவிட்டாரா அல்லத இந்தியாவிற்கு தப்பிச்சென்றுள்ளாரா என்பதை உறுதிசெய்வதற்காக புதைக்கப்பட்டுள்ள பெருமளவு உடல்பாகங்களை மரபணுபரிசோதனைக்கு உட்படுத்தவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

நிசார் என்ற சாட்சியொருவர் சாரா புலத்சினி என்ற தமிழ் பெண் இஸ்லாமிய மதத்திற்கு மாறி கட்டுவாப்பிட்டிய தற்கொலைகுண்டுதாரி ஹஸ்துன் என்பவரை திருமணம் செய்தார் அவர் இந்தியாவிற்கு தப்பிச்சென்றுவிட்டார் என குறிப்பிட்டுள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுவரையில் எதுவும்நிருபிக்கப்படவில்லை,என தெரிவித்துள்ள அமைச்சர் பொலிஸ்உத்தியோகத்தர் ஒருவர் சாரா தப்பிச்செல்வதற்கு உதவியi தான் பார்த்ததாகவும் நிசார் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

சாட்சியமளித்த ஒருவர்அவ்வாறு தெரிவித்தார் ஆனால் சிசிடிவி கமரா காட்சிகளோ அல்லது ஆனால் வேறு எந்;த ஆதாரமோ இல்லை அவர் பொய்சொல்லியுள்ளார் என கருதுகின்றோம் எனவும் அமைச்சர்தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை முடிவிற்கு கொண்டுவரவிரும்புகி;ன்றேன் இந்திய புலனாய்வு துறையை அணுகியுள்ளோம் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்,வேறு எந்த ஆதாரங்களுமில்லை இதன் காரணமாக நாங்கள் இந்த விவகாரத்தை முடிவிற்கு கொண்டுவரமுடியாத நிலையில் உள்ளோம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒருசில செகண்ட்களில் அவர் தப்பியிருக்கலாம் ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார் என்றே நாங்கள் கருதுகின்றோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.