கருணாநிதி உடல் நிலை தொடர்ந்து முன்னேற்றம்: டி.கே.எஸ்.இளங்கோவன்

233 0

201612201027193392_tks-elangovan-says-karunanidhi-physical-condition_secvpfகாவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு கடந்த 15-ந்தேதி கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக மீண்டும் காவேரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அவருக்கு தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் சுவாசிக்கும் வகையில் சுவாசக்குழாய் (டிரக்கியாஸ்டமி) பொருத்தப்பட்டது.

தற்போது கருணாநிதி நல்ல குணமடைந்து வருகிறார். தனது அறையிலேயே டி.வி. பார்க்கிறார். பத்திரிகைகளை படிக்கிறார். விரைவில் அவர் வீடு திரும்ப உள்ளார்.இன்று காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது-தலைவர் கலைஞர் உடல் நலம் நன்றாக தேறி உள்ளது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நோய்த்தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பார்வையாளர்கள் அவரை சந்திப்பது தவிர்க்கப்பட்டது.உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர் விரைவில் வீடு திரும்புவார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.