இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

171 0

அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் பள்ளிவாசல்களின் பொறுப்புக்களிலிருந்து விலக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வக்பு சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த அமைப்புக்களிலுள்ள உறுப்பினர்கள் உடனடியாக, அந்தந்த பொறுப்புக்களிலிருந்து விலக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் சர்வதேச ரீதியில் இயங்கும் 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு அண்மையில் இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இந்த தடையுத்தரவு அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் கடந்த 13ஆம் திகதி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.