கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள தினம் குறித்த அறிவிப்பு!

187 0

நடைபெற்று முடிந்த கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள தினம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கமைய இந்த மாத இறுதியில் குறித்த பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டு, மூன்று மாத காலப் பகுதிக்குள் பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிட எதிர்பார்க்கப்படுகின்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளார்.