கொழும்பு மாநகர சபை வௌியிட்டுள்ள அறிவிப்பு

260 0

கொழும்பு மாநகர சபையில் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக 0112 208 208 என்ற துரித தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்வதற்கு பொது மக்களுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு மாநாகர சபையினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பில் தொலைபேசியின் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று மாநகர சபை தெரிவித்துள்ளது.

0112 208 208 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கொழும்பு மாநகர சபையின் தகவல் மற்றும் சேவைகளை வழங்கும் பிரிவின் அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு பொது மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இந்த சேவை அலுவலக நாட்களில் காலை 08.30 தொடக்கம் மாலை 04.30 மணி வரையில் நடைபெறும் மேலும் அவசர சேவையான தீயணைப்பு சேவை மற்றும் நீர் மற்றும் வடிகாலமைப்பு சேவை 24 மணித்தியாலயமும் இடம்பெறும்.