கிளிநொச்சியில் நிலவும் வரட்சியினால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை

262 0

paddyuகிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வரட்சியினால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சியில் சுமார் 30,000 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவை பாதிப்படையும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலையடைகின்றனர்.

இதே வேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் போதியளவு மழை இல்லாத நிலையில் விவசாய செய்கைகள் அழிவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஒட்டுச்சுட்டான் பகுதியில் உள்ள முத்தையன் கட்டு குளத்தில் போதியளவு நீரின்மையினால் குறித்த பகுதியில் விவசாயம் மற்றும் சிறு தானிய பயிர்ச் செய்கையில் ஈடுபடுபவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.போதியளவு மழை இல்லாததால் விவசாய செய்கைகளை பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் குறித்த இரு மாவட்ட விவசாயிகளும் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.