கிளிநொச்சியில் பாரிய விபத்து! தெய்வாதீனமாக தப்பிய பயணிகள்

258 0

கிளிநொச்சி வலய கல்விபணிமனைக்கு முன்பாக கார் மற்றும் டிப்பர் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று பகல் 12 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கவில்லை.

கிளிநொச்சியிலிருந்து முறிகண்டி நோக்கி ஒரே திசையில் பயணித்த இரு வாகனங்களே விபத்துக்குள்ளாகியுள்ளன.

வீதியில் பயணித்த கார் வீதியை குறுக்கிட்டு கடக்க முற்பட்டுள்ளது.

கார் வீதியை கடக்க முற்படுவதை அவதானிக்காமல் டிப்பர் வாகனம் முந்தி செல்ல முற்றப்பட்போது காருடன் மொதியுள்ளது.

இதன்போது கார் பாரிய அளவில் சேதமடைந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான கார் வீதி ஓரத்தில் இருந்த வாகன டயருடன் மோதி நின்றுள்ளது.

விபத்தில் வாகனங்கள் பாரிய சேதமடைந்துள்ளதுடன், எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்பட்டிருக்கவில்லை.

விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்