யாழில் தடையை மீறிய இ.போ.ச! குவிக்கப்பட்ட பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்

215 0

இலங்கை போக்குவரத்து சபையினர் தங்களின் சேவை யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் செயற்படத் தொடங்கியுள்ள நிலையில் பொலிஸார் குறித்த செயற்பாட்டுக்கு தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

யாழ்.நகர வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக கடந்த 26 ஆம் திகதியிலிருந்து யாழ்.நகரின் மத்திய பகுதிகடைகள் மூடப்பட்டிருந்தன.

அத்துடன் பொதுமக்கள் ஒன்றுகூடலை மட்டுப்படுத்தும் முகமாக வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு போக்குவரத்து சேவையும் யாழ்.பண்ணை பகுதிக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நாளைய தினம் தொற்று உறுதி செய்யப்படாதோரின் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

எனினும், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக இன்று வரை பேணப்பட்டு வந்த நடைமுறையினை இலங்கை போக்குவரத்து சபையினர் மீறி விட்டனர். அத்துடன் சுகாதாரப் பிரிவினர் இன்று மாலையே தமது முடிவினை அறிவிக்க உள்ள நிலையில் கட்டுப்பாட்டினை மீறி அரச பேருந்து சேவை இயங்கத் தொடங்கியுள்ளது.

இன்று இலங்கை போக்குவரத்து சபை யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தமது சேவையை ஆரம்பித்தமைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

எனினும் தனியார் பேருந்து சேவைகள் அனைத்தும் அண்மையில் திறக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இடம் பெறுகின்ற நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவை மாத்திரம் யாழ்.நகரப்பகுதியில் சுகாதாரப் பிரிவினரின் அனுமதி பெறப்படாது இடம்பெறுகின்றமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.