இலங்கையர்கள் அரசு அறிவிக்காது வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்துள்ள பணத்தை இலங்கைக்கு கொண்டுவர அனுமதி வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதனடிப்படையில், சட்டவிரோதமான முறையில் அல்லாமல் நேர்மையான முறையில் சம்பாதித்து வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்துள்ள பணத்தை நாட்டுக்குள் கொண்டுவர இலங்கையர்களுக்கு அனுமதி கிடைக்கும்.
சுவிஸ் வங்கிகள் மற்றும் பனாமா பத்திரிகைகளில் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களும் தமது பணத்தை இலங்கைக்கு கொண்டுவர முடியும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் தமது நாட்டு மக்கள் வெளிநாடுகளில் வைப்புச்செய்திருந்த பணத்தை மீண்டும் தமது நாடுகளுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்த விதம் தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.

