பொருத்து வீடுகளை வலுகட்டாயமாக மக்களுக்கு வழங்க முயற்சி – ஸ்ரீதரன்

242 0

sritharan-mp-59696e5-600x338பொருத்து வீடுகளை வலுகட்டாயமாக மக்களுக்கு வழங்க மீள்குடியேற்ற அமைச்சு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

குறித்த பொருத்து வீடுகள் ஐந்து வருடங்களிற்கு கூட தாக்குப்பிடிக்காது.

எனினும் இந்த பொருத்து வீடுகளை பதினாறு இலட்சம் ரூபா செலவில் கட்;டிக்கொடுக்க மீள்குடியேற்ற அமைச்சு பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்களின் விருப்புகளுக்கு மாறாக குறித்த வீடுகளை அவர்களுக்கு வழங்க முயற்;சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிவஞானம் ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.