குர்திஸ் படையினர் மீது, துருக்கிய ஜனாதிபதி குற்றச்சாட்டு

258 0

kurdish-militia-ypg-in-syria1_t479_mini-720x480துருக்கியில் இடம்பெற்ற சிற்றூர்ந்து குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குர்திஸ் படையினர் மீது அந்த நாட்டு ஜனாதிபதி தையிப் எர்டோகன் குற்றம் சுமத்தியுள்ளார்.

துருக்கியின் கைசேரியில் உள்ள சந்தை தொகுதி ஒன்றில் நேற்று சிற்றூர்ந்து குண்டு தாக்குதுல் ஒன்று நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் போது அருகில் பேருந்து ஒன்றில் இருந்த 13க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் 55 பேர் வரையில் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் எவரும் பொறுப்பேற்காத நிலையில் துருக்கி ஜனாதிபதி எர்டோகன், குர்திஸ் படையினரே இந்த குண்டு தாக்குதலை நடத்தியதாக குற்றம் சுமத்தினார்.