பஷில் மீதான மல்வானை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

402 0

பஷில் மீதான மல்வானை வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதாகக் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டபோது, கம்பஹா இலக்கம் 01 மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்ட இருவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜுன் மாதம் 28ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

மல்வானைப் பகுதியில், 16 ஏக்கர் காணியைக் கொள்வனவு செய்து, அதில் வீடொன்றை நிர்மாணித்து, அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன் படுத்திய குற்றச்சாட்டின்கீழ், அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கம்பஹா இலக்கம் 01 மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.