இருளில் மூழ்கியது வடக்கு மாகாணம்

260 0

வடக்கு மாகாணம் முழுவதும் இன்று இரவு இருளில் மூழ்கியுள்ள நிலையில் இதனால் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளனர்.

க.பொ.த சாதாரண பரீட்சை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளனால் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பெரிதும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

ஒரே நேரத்தில் மாகாணம் முழுவதும் மின்சார தடை ஏற்பட்டிருப்பதற்கு அநுராதபுரம் புதிய க்ரிட் உப மின்நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.