சர்வதேச மகளிர் தினம்: தமிழ்ப் பெண்களுக்கு நீதி கோரி யாழ்.,முல்லையில் போராட்டம்

258 0

அரசாங்கம் தமிழ்ப் பெண்களுக்கு இழைத்த அநீதிகளுக்கு நீதி கோரி சர்வதேச மகளிர் தினமான இன்று யாழ்ப்பாணத்திலும், முல்லைத்தீவிலும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெறவுள்ள தீச்சட்டி ஏந்தும் போராட்டம்,  முற்பகல் 11 மணியளவில் நல்லூரில் சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறும் இடத்திலிருந்து ஆரம்பித்து நாவலர் வீதியில் உள்ள ஐ.நா. அலுவலகம் வரை செல்லும்.

இந்தப் போராட்டத்துக்கு பொது, மகளிர் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள் சமூகம் என்பன ஆதரவு தெரிவித்துள்ளன.

இதேவேளை, முல்லைத்தீவில் தொடர் போராட்டம் நடத்தி வரும் காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினர் மகளிர் தினத்தை துக்க தினமாக
அனுஷ்டித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

முல்லைத்தீவு புனித இராயப்பர் தேவாலயத்தில் முற்பகல் 10 மணி முதல் இடம்
பெறும் இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொள்ளு
மாறு அழைப்பு விடுத்துள்ளனர்.